×

சிவசேனா மாநில மகளிரணி தலைவராக சத்ய நியமனம்

ஓசூர், செப்.20:  சிவசேனா கட்சியின் தமிழ்நாடு மகளிரணி தலைவராக ஓசூரைச் சேர்ந்த சத்ய  நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, யுவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே, சிவசேனா மாநில தலைவர்கள் டாக்டர் தர்சன் நந்துர்கர், மும்பை ஸ்டாலின் ஆகியோர் ஒப்புதலோடு, தமிழ்நாடு துணை தலைவர் செந்தில் பரிந்துரையின்படி சிவசேனா கட்சியின் மாநில மகளிரணி தலைவராக தமிழ்நாடு மாநில தலைவர் ரவிச்சந்திரன் நியமனம் செய்துள்ளார். அதற்காக கட்சியின் தேசிய தலைவர் உத்தவ் தாக்ரேக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய கட்சியான சிவசேனாவில் இது போன்ற ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பது அதிர்ஷ்டமாகும். இதனை பயன்படுத்தி சமூக சேவையில் மேலும் தீவிரம் காட்டுவேன். அதிலும் முக்கியமாக பெண் பாதுகாப்பு, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பெண்களுக்கு எதிரான அடக்குமுறையை எதிர்த்து குரல் கொடுப்பேன். இவ்வாறு சத்ய கூறினார்.

Tags : Satyahu ,state women ,Shiv Sena ,
× RELATED நாகப்பட்டினம் சில்லடி தர்கா கடற்கரையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை