×

திருச்சி வந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு 52 பயணிகள் மாற்று விமானத்தில் சென்னை புறப்பட்டு சென்றனர் 2 மணிநேரம் அவதி

ஏர்போர்ட், செப். 20: திருச்சியிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2 மணிநேரத்திற்கு பின் மாற்று விமானத்தில் 52 பயணிகள் புறப்பட்டு சென்றனர்.சென்னையிலிருந்து திருச்சிக்கு இண்டிகோ விமானம் இயக்கப்பட்டு வருகிறது.சென்னையிலிருந்து திருச்சிக்கு தினமும் இண்டிகோ விமானம் மாலை 4.05மணிக்கு வந்து திருச்சியிலிருந்து 4.45 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்லும். வழக்கம்போல் நேற்று மாலை 4.05 மணிக்கு சென்னையிலிருந்து 52 பயணிகளுடன் இண்டிகோ விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. பின்னர் மீண்டும் 4.45 மணிக்கு விமானம் கிளம்பும் நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் மிகுந்த அவதியுற்றனர்.அதையடுத்து சென்னையிலிருந்து இரவு 7.50 மணிக்கு திருச்சிக்கு இண்டிகோ விமானம் ஒன்று வந்தது.அதில் 52 பயணிகளுடன் இரவு 8.20 மணிக்கு சென்னை புறப்பட்டு சென்றது. இதனால் திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் 2 மணி நேரம் அவதியுற்றனர்.



Tags : passengers ,flight ,Tiruchi ,Chennai ,
× RELATED சென்னையில் இருந்து மொரிஷியஸ்...