×

திருமக்கோட்டை அருகே விவசாயி மீது பீர் பாட்டிலால் தாக்குதல்: 4 பேருக்கு வலை

மன்னார்குடி, செப். 19:திருமக்கோட்டை அருகே முன் விரோதம் காரணமாக பீர் பாட்டிலால் விவசா யியை தாக்கிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.தஞ்சை மாவட்டம் மதுக்கூர் காவல் சரகத்திற்குட்பட்ட பாவாஜிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் நீலமோகன் (37). விவசாய கூலி தொழிலாளி. இவருக் கும் அதே கிராமத்தை நாடிமுத்து (38) என்பவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே மகாராஜபுரம் கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடைக்கு நீலமோகன் நேற்று தனியாக மது அருந்த வந்துள்ளார். இதனையறிந்த நாடிமுத்துவும் அவருடைய நண்பர் களான பாவாஜிக்கோட்டையைச் சேர்ந்த முருகேசன் (34), முத்துப்பேட்டை யைச் சேர்ந்த நடராஜன் (30) மற்றும் அடையாளம் தெரியாத நாடிமுத்துவின் உறவினர் ஒருவர் ஆகிய நான்கு பேரும் மகாராஜபுரம் டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளனர்.

அங்கு மது குடித்து கொண்டிருந்த நீலமோகனிடம் ஏற்கனவே நடந்த பிரச் சனை குறித்து வாக்குவாதம் செய்துள்ளனர். இதில் வாக்குவாதம் முற்றி நாடிமுத்து உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து டாஸ்மாக் பாரில் கிடந்த பீர் பாட்டில்களை எடுத்து நீலமோகனை சரமாரி தாக்கியுள்ளனர். இதில் நீலமோகனின் பின் பக்க தலை மற்றும் உடல் முழுவதும் காயமேற்பட்டு ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். இதனை கண்டு நாடிமுத்து உள்ளிட்டோர் தப்பியோடி விட்டனர். படுகாயமடைந்து கிடந்த நீலமோகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மன் னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேற் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இதுகுறித்து தகவலின் பேரில் திருமக்கோட்டை (பொ) இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி, எஸ்ஐ முத்துக்காமாட்சி ஆகியோர் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய 4பேரை தேடி வருகிறார்கள்.

Tags : Beer attack ,Tirumakottai ,
× RELATED திருவாரூர் திருமக்கோட்டை அருகே...