×

ரயில்வே ஊழியர்கள் பழநியில் ஆர்ப்பாட்டம்

பழநி, செப். 19: பழநி ரயில் நிலைய வளாகத்தில் சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளைத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் ரபீக், கிளைச் செயலாளர் தண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.ரயில்வே துறை மற்றும் ரயில்வே மருத்துவமனையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும். மத்திய அரசு உற்பத்தி தொழிற்சாலைகளை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும்,மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags : Railway employees ,
× RELATED 250 ரயில்வே ஊழியர்கள் கைது