×

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு

திருப்பூர், செப்.19: புரட்டாசி மாத சனிக்கிழமை, பிரசித்தி பெற்ற பெருமாள் கோவிலுக்கு செல்ல சிறப்பு பஸ் வசதி ஏற்பாடுகளை போக்குவரத்து துறையினர் செய்துள்ளனர். இதன் படி வரும், 21ம் தேதி,  முதல் தொடர்ந்து ஐந்து வார சனிக்கிழமைகளும், பல பகுதிகளுக்கு சிறப்பு பஸ்களை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இயக்குகிறது.கோவையில் இருந்து காரமடை ரங்கநாதர் கோயில், தென் திருப்பதி, பரமேஸ்வரன்பாளையம் வெங்கடேச பெருமாள் கோயில், வால்பாறை பாலாஜி கோயிலுக்கு, 50 சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.  திருப்பூர், காங்கயம், தாராபுரம், பல்லடத்தில் இருந்து ராமசாமி கோயிலுக்கு, 40 சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. இதேபோல், அவிநாசி, அன்னுாரில் இருந்து மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோயில் மற்றும் தாளக்கரை  லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பஸ்களில், சாதாரண கட்டணமே வசூலிக்கப்படுவதாக, போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்ததனர்.

Tags :
× RELATED திருப்பூரில் நாளை கேன்சர் விழிப்புணர்வு