×

ஈரோடு மாவட்டத்தில் தொடர் மழை

ஈரோடு, செப்.19: ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக கவுந்தப்பாடியில் 75 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழைபெய்து வருவதால் நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் தொடங்கிய மழை, நள்ளிரவு வரை நீடித்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக கவுந்தப்பாடியில் 75.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. மற்ற இடங்களில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு: ஈரோடு 36, பெருந்துறை 31, கோபி 47, சத்தி 17, பவானி 16.2, நம்பியூர் 42, மொடக்குறிச்சி 28, எலந்தைகுட்டை மேடு 33.2, அம்மாபேட்டை 30, கொடிவேரி 31.2, குண்டேரிப்பள்ளம் 3, வரட்டுப்பள்ளம் 4.2. மாவட்டத்தில் சராசரியாக பெய்த மழையளவு 21.1 மில்லி மீட்டர் ஆகும்.

Tags : Erode ,district ,
× RELATED மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு