ஈரோடு, செப். 19: திங்களூர், ஈங்கூர் பகுதியில் மின்நிறுத்தம் நாளை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது. திங்களூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வரும் நாளை (20ம் தேதி) நடப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெருந்துறை கோட்டத்தை சார்ந்த திங்களூர், கிரேநகர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டாகவுண்டன்பாளையம், சுங்ககாரன்பாளையம், சீனாபுரம் மேற்கு பகுதி மட்டும், செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், மேட்டூர், வீராணம்பாளையம், கராண்டிபாளையம், தலையம்பாளையம், பொன்முடி, ஆயிகவுண்டன்பாளையம், குள்ளம்பாளையம், நெட்டசெல்லாபாளையம், கீழேரிபாளையம், பட்டக்காரன்பாளையம், நெசவாளர் காலனி, மடத்துப்பாளையம், நடுவலசு, கோமையன்வலசு, தாசம்புதூர், வேலாங்காடு, மானூர்காடு, மம்முட்டிதோப்பு ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
ஈங்கூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடப்பதால் இன்று (19ம் தேதி) 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெருந்துறை கோட்டத்தை சார்ந்த பெருந்துறை தெற்கு பகுதி மட்டும், கொங்கு காலேஜ், நந்தா காலேஜ், மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டிச்சிபாளையம், ஈங்கூர், பாலப்பாளையம், மு.பிடாரியூர் வடக்குப்பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளர் காலனி, பெருந்துறை ஆர்.எஸ் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.