×

கைதி சிகிச்சைக்கு அனுமதி

சேலம், செப்.19:  சேலம் மாவட்டம் காடையாம்பட்டியை அடுத்த பொட்டியாப்பட்டியை சேர்ந்தவர் நரேஷ்குமார் (19). இவரை பாகலூர் போலீசார் திருட்டு, வழிப்பறி வழக்கில் கைது செய்து, மத்திய சிறையில் அடைத்தனர். அவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென இடது காலில் வலி ஏற்பட்டது. இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் நரேஷ்குமாரை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துமவனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.


Tags :
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்