×

நாமக்கல்லில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

 நாமக்கல், செப்.19:நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், நேற்று நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராகுல்காந்தி, சோனியாகாந்தியை அவதூறாக பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தமிழகத்தில் இந்தி திணிப்பு முயற்சியை மேற்கொள்ளும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரை கண்டித்து, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஷேக்நவீத் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மாவட்ட தலைவர் சுப்பிரமணி, வட்டார தலைவர் இளங்கோ உள்ளிட்ட பலர்
கலந்து கொண்டு கோரிக்கையை விளக்கி கோஷமிட்டனர்.

Tags : demonstration ,Namakkal ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்