×

அரூர் அருகே புளியமரம் சாய்ந்ததில் போக்குவரத்து பாதிப்பு

அரூர்,செப்.19: அரூர் அருகே கூத்தாடிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில், சாலையோரம் இருந்த புளியமரம் வேருடன் பெயர்ந்து விழுந்ததால், சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அரூர்- ஊத்தங்கரை சாலையில் கொங்கவேம்பு அருகே கூத்தாடிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் சாலையோரம் பழமையான புளியமரம் ஒன்று உள்ளது. இந்த புளியமரம் நேற்று மாலை சாலையில் வேருடன் பெயர்ந்து விழுந்ததது. இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த வாரம் அரூர் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் கனமழை பெய்தது. தொடர்ந்து ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் மண்ணில் ஈரப்பதம் காணப்படுகிறது. இதனால் புளியமரம் வேருடன் சாய்ந்துவிட்டது. இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலைத்துறையினர், புளியமரத்தின் கிளைகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

Tags : Aroor ,
× RELATED ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை