×

முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்த இன்ஜினியர் கைது

ஜெயங்கொண்டம், செப்.19: ஜெயங்கொண்டம் அருகே முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்த என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வரதராஜன்பேட்டை கிராமம் ஆரோக்கியபுரம் தெருவை சேர்ந்தவர் ஜெபராஜ் (32). இவர் இன்ஜினியரிங் முடித்து புதுச்சேரி தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கர்மேல் மேரி என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜேனட் ஜெபி என்ற 2 வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் பட்டணங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மகள் உமாதேவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும், இதனால் கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கர்மேல் மேரி சென்னைக்கு வேலைக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய ஜெபராஜ், உமாதேவியை (36) இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கர்மேல்மேரி இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா. ஜெபராாஜ் மீதும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரர் ஆனந்த், உறவினர் நித்யா, பெர்னாட்ஸ் பவுல், பட்டணங்குறிச்சியை சேர்ந்த வீரபாண்டியன், உமாதேவி, மற்றும் அவரது தந்தை அண்ணாதுரை, தாய் தனம் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிந்து ஜெபராஜை கைது செய்தனர். மேலும் ஏழு பேரை தேடி விசாரித்து வருகின்றனர்

Tags : engineer ,
× RELATED பாலக்கோடு அருகே வாகன சோதனையில் ₹95 ஆயிரம் பறிமுதல்