×

கரூர் பொன்நகர் சந்திப்பில் விபத்தை தடுக்க பேரிகார்டு வைக்க வேண்டும் பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கரூர்,செப்.19: கரூர் பொன்நகர் சந்திப்பு பகுதியில் விபத்தை தடுக்கும் வகையில் பேரிகார்டு வைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்
கரூர் ராயனூர் பகுதியில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் பொன்நகர் உள்ளது. இந்த பகுதியில் இருந்து தாந்தோணிமலை, ஒத்தையூர், ராயனூர், கரூர் போன்ற பகுதிகளுக்கான சாலை பிரிகிறது. மேலும், இந்த பகுதியை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

இந்நிலையில், பொன்நகர் பிரிவின் வழியாக அனைத்து தரப்பு போக்குவரத்து நடைபெற்றாலும், ஆபத்தான வளைவு பாதையான இங்கு அடிக்கடி இரவு நேரங்களில் விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. மேலும், காலை நேரங்களில் பொன்நகர் பிரிவில், சில பேருந்துகள் இந்த பகுதியில் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால், பிற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது. எனவே, இந்த பகுதியில் வேகத்தடை அல்லது பேரிகார்டு போன்ற பாதுகாப்பு நடவடிக்கை ஏதாவது ஒன்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : junction ,Karur Ponnagar ,accident ,
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...