×

சங்கரம்பாளையம் பகுதியில் உள்ள குளத்தை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

கரூர், செப். 19: கரூர் சங்கரம்பாளையம் பகுதியில் உள்ள குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் வாங்கல் செல்லும் சாலையில் சங்கரம்பாளையம் உள்ளது. இந்த பகுதியில் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த குளம் தற்போது பாதுகாப்பின்றி உள்ளது. இந்த குளத்தை சீரமைத்து, சுற்றிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு பாதுகாக்க தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விரைவில் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள் இந்த குளத்தை சீரமைக்க தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : pond ,area ,Sankarampalayam ,
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்