×

பைபாஸ் சாலைகளில் மேம்பால பணிகளை விரைந்து துவங்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

கரூர்,செப்.19: கரூர் திருச்சி பைபாஸ் சாலை வீரராக்கியம், கோடங்கிப்பட்டி, கரூர் சேலம் பைபாஸ் சாலை மண்மங்கலம் போன்ற சில பகுதிகளில் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. சாலையை பொதுமக்கள் நடந்தும், வாகனங்களில் கடந்து செல்ல முயலும் போது, அதிவேகமாக வரும் வாகனங்களில் இந்த பகுதிகளில் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. எனவே, விபத்தை தடுக்கும் வகையில் இந்த பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த பகுதியினர் பலமுறை மறியல் போராட்டங்களை நடத்தினர். இதனடிப்படையில், துறை அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுவதோடு, விரைவில் இந்த பகுதியில் மேம்பாலங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி, இந்த பகுதிகளில் மேம்பாலம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : public ,bypass roads ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...