பட்டுக்கோட்டை, செப். 19: பட்டுக்கோட்டையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி இரும்பு, மரம், பாத்திரம், சிற்பம், தங்கம் சார்ந்த வேலை செய்பவர்கள் 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பேரணி வடசேரிரோடு காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு வடசேரிரோடு முக்கம், பெரியகடைத்தெரு, பெரியதெரு, மணிக்கூண்டு, தலையாரிதெரு, தெற்கு காளியம்மன் கோயில் தெரு, அறந்தாங்கிரோடுமுக்கம், சாமியார்மடம், தஞ்சை சாலை வழியாக வந்து தனியார் திருமண மண்டபத்தில் முடிந்தது. பேரணியை தொடர்ந்து ஜந்தொழில் செய்பவர்களின் கூட்டம் நடந்தது.