×

புதுப்பெண் தூக்கிட்டு சாவு

புதுக்கோட்டை, செப்.19:புதுக்கோட்டை அருகேயுள்ள மேலகூட்டுடன்காடு தெற்கு தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்வம். இவரது மகள் முத்துவள்ளி(19). பிளஸ்2 முடித்துள்ளார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த முருகன் மகன் மகாராஜாவுக்கும் வருகிற 2020 பிப்ரவரி மாதம் 9ம்தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் காலை முத்துவள்ளியும் அவரது பாட்டியும் வீட்டில் இருந்தனர். திடீரென முத்துவள்ளி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் திருமலை, சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முத்துவள்ளி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரி த்து வருகின்றனர்.

Tags :
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு