×

பழையகாயலில் பணம் கையாடல் பிரச்னை சகோதரர்களை கொல்ல முயன்ற 4 பேருக்கு 10 ஆண்டு சிறை

ஆறுமுகநேரி, செப்.19: பழையகாயல் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியஜோசப் செல்வம்(53). இவர் பரிபூரணம் நகர் ஊர் தலைவராக இரு ந்தார். அப்போது பணம் கையாடல் செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்ததால் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. இதன் காரணமாக ஆரோக்கிய ஜோசப் செல்வத்திற்கும் ஊர்காரர்கள் சிலருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 17.12.2015ம் ஆண்டு பரிபூரணம் நகரை சேர்ந்த வினோத்குமார்(40), அவரது தம்பி விஜயன்(35) ஆகிய இருவரை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றனர். இதில் அவர்கள் காயத்துடன் தப்பினர்.

இது தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து பழையகாயல் தெற்குதெரு முன்னாள் ஊர் தலைவர் ஆரோக்கிய ஜோசப் செல்வம், பூரண ஜீவன்(57), மைக்கேல் அந்தோணி(66), அசோகன் மகன் சாலமோன் ராயர்(32) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருச்செந்தூர் கோர்ட்டில் நடந்து வந்தது.கடந்த 4 ஆண்டாக நடந்த வழக்கு விசாரணையில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் ஆரோக்கிய ஜோசப் செல்வம் உள்பட 4 பேருக்கும் நீதிபதி பரமேஸ்வரி 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அதன் பிறகு 4பேரும்  பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : men ,jail ,brothers ,
× RELATED இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்