×

பொது பிரச்னைகள் குறித்து சட்டசபை குழுவிற்கு மனு அனுப்பலாம்

திருவள்ளூர், செப். 19: மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு சட்டசபையில், 2018-2020ம் ஆண்டுகளுக்கான மனுக்கள் குழு திருவள்ளுர் மாவட்டத்தில் விரைவில் கூடுவதென முடிவு செய்துள்ளது.இதனையொட்டி, மாவட்டத்துக்கு உட்பட்ட தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்னைகள், குறைகள் குறித்து மனுக்களை (ஐந்து நகல்கள் தமிழில் மட்டும்) மனுதாரர்கள் தேதியுடன் கையொப்பமிட்டு, தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, சென்னை  600009 என்ற முகவரிக்கு வரும் அக்டோபர் 18ம் தேதிக்குள் அனுப்பலாம்.பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப் பிரச்னைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம். மனுக்கள் ஒரேயொரு பிரச்சனையை உள்ளடக்கியதாகவும், ஒரேயொரு துறையைச் சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும்.ரு மனு மட்டுமே ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படும். மனுதாரர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் தனியாக அனுப்பப்படும். 18.10.2019க்குப் பின்னர் பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Legislative Committee ,
× RELATED ஆளுநர் சட்டப்பேரவைக்கு வராமலேயே...