×

ஒப்பந்த ஊழியருக்கு உருட்டுக்கட்டை அடி

ஆவடி, செப். 19: ஆவடி அடுத்த பாலவேடு பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (21). ஆவடி, டேங்க் பேக்டரியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 16ம் தேதி மோகன்ராஜ், வீட்டிலிருந்து பைக்கில் வேலைக்கு புறப்பட்டுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த தமிழ்மணி (23), சுரேஷ் (23) ஆகியோர் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நின்று கொண்டிருந்தனர்.  அவர்களிடம், போக்குவரத்துக்கு இடையூறாக ஏன் சாலையில் நிற்கிறீர்கள் ஓரமாக நிற்க வேண்டியதுதானே என்று மோகன்ராஜ் கேட்டுள்ளார். இதனையடுத்து அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதன் பிறகு தமிழ்மணி, சுரேஷ் இருவரும் சேர்ந்து மோகன்ராஜை சரமாரியாக உருட்டுக் கட்டையால் அடித்துள்ளனர்.  இதில் படுகாயமடைந்த மோகன்ராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் அடிப்படையில் முத்தாபுதுப்பேட்டை  போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழ்மணி, சுரேஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Tags : contract employee ,
× RELATED திருத்தணி வட்டார போக்குவரத்து...