×

புதுவையில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

புதுச்சேரி, செப். 19: புதுச்சேரியில் கடந்த ஒரு வாரமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பூமி குளிர்ந்து இதமான சூழல் நிலவுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று முன்தினம் பெய்த மழையால் நகர பகுதியில் வெள்ளம்போல் மழைநீர் தேங்கி போக்குவரத்து சிறிதுநேரம் பாதிக்கப்பட்டது. புதுவையில் நேற்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனிடையே வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.இந்த நிலையில் புதுச்சேரி துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று பிற்பகலில் ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் யாரும் தொழிலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Storm warning cage boom ,
× RELATED பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்