×

மதுராந்தகம் ஒன்றியத்தில் காஞ்சி எம்பி வாக்காளர்களுக்கு நன்றி

செய்யூர், செப். 19: காஞ்சிபுரம் தொகுதி மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்பி செல்வம், மதுராந்தகம் தொகுதியில் வாக்காளர்களுக்கு நேற்று நன்றி தெரிவித்தார்.காஞ்சிபுரம் தொகுதி மக்களவை தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செல்வம், அதிக வாக்குகளை பெற்று வெற்றியடைந்தார். இதையொட்டி, தன்னை வெற்றிபெற செய்த வாக்காளர்களுக்கு பல்வேறு பகுதிகளுக்கு சென்று நன்றி தெரிவித்து வருகிறார்.இந்நிலையில், மதுராந்தகம் ஒன்றியம் கினார் கிராமத்தில் நேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். முன்னதாக, அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திமுக கல்வெட்டினை திறந்து வைத்து, கட்சி கொடியை ஏற்றினார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு முதுகரை, சிலாவட்டம், பாக்கம், ஜமீன் எண்டத்தூர் உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு திறந்த ஜீப்பில் சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அவருக்கு, கிராம மக்கள் சார்பில் ஆளுயர மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது, மதுராந்தகம் எம்எல்ஏ புகழேந்தி, ஒன்றிய செயலாளர் தர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கினார் அரசு, கட்சி நிர்வாகிகள் தணிகையரசு, வெங்கடேசன், சிகாமணி, முத்தையா  சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : MP voters ,Kanchi ,
× RELATED தியாகராஜர் கண்ட தெய்வீக தரிசனம்!