×

காங். ஆர்ப்பாட்டம்

வேப்பூர், செப். 19: தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தியை  பற்றி அவதூறாக பேசியதாகவும், அதனை அமைச்சர் திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி தலைமையில் வேப்பூர் கூட்ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

விருத்தாசலம் நகர தலைவர் ரஞ்சித்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜீவ்காந்தி, விஜயகுமார், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் சின்னதுரை, நேரு, நிர்வாகிகள் கலியபெருமாள், குப்புசாமி, பீட்டர் சின்னகண்ணு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஐவதுகுடி பெரியசாமி, வேப்பூர் மஞ்சமுத்து, மாவட்ட பொது செயலாளர் துரைசாமி  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்