×

கலெக்டர் முன்னிைலயில் திமுக பிரமுகர் மீது தாக்குதல் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

சிவகங்கை, செப். 17: சிவகங்கை கலெக்டர் அலுவலக விவசாய குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் முன்னிலையில் திமுக பிரமுகர் தாக்கப்பட்ட சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்ய சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த ஜுலை 30ல் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் திருப்புவனம் அருகே திருப்பாச்சேத்தியை சேர்ந்த திமுக பிரமுகர் முத்துராஜா மீது கலெக்டர் ஜெயகாந்தன் முன்னிலையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தாக்கப்பட்ட முத்துராஜா மீதே, கலெக்டர் புகார் அளித்தார்.
கலெக்டர் அலுவலகத்தில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது புகார் அளிக்கவில்லை. கலெக்டர் புகாரின் பேரில் சிவகங்கை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துராஜாவை கைது செய்தனர். முத்துராஜா அளித்த புகார் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து முத்துராஜா கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க சிவகங்கை டவுன் போலீசாருக்கு உத்தரவிடக்கோரி சிவகங்கை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில்(எண்.1) மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது நீதிமன்றம் அளித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: சிவகங்கை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர்,
இந்த வழக்கு தொடர்பாக உத்தரவு கிடைத்த ஒரு மாத காலத்திற்குள் உரிய சாட்சிகளிடம் விசாரணை நடத்தி, ஆவணங்களை பரிசீலனை செய்து தேவையெனில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கும்படியும், மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த அறிக்கையை அவ்வப்போது நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படியும் உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : DMK ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...