பெருந்துறை, செப்.17: பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஈரோடு மாவட்ட மனநலத் திட்டம் சார்பில் “உலக தற்கொலை தடுப்பு வார” விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் ராசேந்திரன் தலைமை வகித்தார். மனநல திட்ட பொறுப்பு அலுவலர் கவிதா தற்கொலைக்கான காரணமும், அவற்றை தடுக்கும் வழிமுறையும் குறித்தும் பேசினார். இதில், கல்லூரி துணை முதல்வர் சந்திரபோஸ், துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் (பொ) சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் கல்லூரி முதல்வர் தலைமையில் அனைத்து மாணவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பொதுமக்களிடையே தற்கொலை தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.