×

கடனை திரும்ப செலுத்த முடியாததால் மகளிர்குழு தலைவி எலி பேஸ்ட் தின்று தற்கொலை

வலங்கைமான், செப்.17: வலங்கைமான் அடுத்த விருப்பாட்சிபுரம் பகுதியில் மகளிர் குழுவில் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாததால் மகளிர் குழு தலைவி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த விருப்பாட்சிபுரம் சிமிலி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் நாகராஜ் மனைவி சித்ரா (35). மகளிர்குழு தலைவியான இவர் தையல் கடை நடத்தி வந்துள்ளார். இதனை மேம்படுத்துவதற்காக மகளிர் குழு மூலம் கடன் பெற்றுள்ளார். இக்கடனை திரும்ப செலுத்த முடியாமல் சிரமம் அடைந்து சித்ரா கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 10ம் தேதி வீட்டில் விஷமான எலி பேஸ்டை தின்று தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதையடுத்து ஆபத்தான நிலையில் இருந்த சித்ராவை வலங்கைமான் அரசு மருத்துவமனை மற்றும் கும்பகோணம் அரசு மருத்துவமனைகளில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துகல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்ட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இரவு சித்ரா இறந்தார். இச்சம்பவம் குறித்து சித்ராவின் கணவர் நாகராஜ் கொடுத்துள்ள புகாரில் வலங்கைமான் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.வாங்கிய கடனை திரும்ப செலுத்தமுடியததாலே தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக கூறப்படுகிறது.

Tags : Eli Paste ,suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை