×

திருமானூர் வரம் தரும் ஆஞ்சநேயர் கோயிலில் வருடாபிஷேகம்

அரியலூர்,செப்.17: அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடக்கரை, பரிசல்துறை தெருவிலுள்ள வரம் தரும் ஆஞ்சநேயர் கோயில் வருடாபிஷேகம் நேற்று நடைபெற்றது.இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓர் ஆண்டு நிறைவடைந்ததையடுத்து, நேற்று காலை வருடாபிஷேகம் தொடங்கியது. காலை 10 மணிக்கு மேல் சிறப்பு யாகமும், தொடர்ந்து , தேன், பஞ்சாமிர்தம், பன்னீர், தயிர் மற்றும் பால் ஆகியவற்றால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாரம் வழங்கப்பட்டது.

பின்னர் மாலை ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இரவு மின்னொளி அலங்கார வாகனத்தில் ஆஞ்சநேயர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து வீதியுலா நடைபெற்றது.

Tags : shrine ,Anjaneyar Temple ,Thirumanur ,
× RELATED கேரளாவில் பெண் வேடமிட்டு ஆண்கள்...