×

அம்பேத்கர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம் 38 பேர் கைது

நாகை, செப்.17: வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முக்குலத்து புலிகள் அமைப்பு தலைவர் சரவணனை விடுவிக்கக்கோரி நாகையில் ஆர்ப்பாட்டம் நடத்திய 38 பேரை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தில் இரு சமூகத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் முக்குலத்து புலிகள் அமைப்பின் தலைவர் சரவணனை விடுவிக்க வேண்டும். சரவணன் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளை திரும்ப பெற வேண்டும். வேதாரண்யம் கலவரத்திற்கு காரணமான உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நாகை அவுரி திடலில் முக்குலத்து புலிகள் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
டெல்டா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தலைமை வகித்தார். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய முக்குலத்து புலிகள் அமைப்பைச் சேர்ந்த 38 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags : protesters ,release ,Ambedkar ,
× RELATED குள்ளஞ்சாவடி அருகே நள்ளிரவில்...