×

கட்டிட தொழிலாளியிடம் பணம், வாட்ச் பறித்த 2 கொள்ளையர் கைது

நாங்குநேரி, செப். 17: நாங்கு நேரியில் கட்டிட தொழிலாளியிடம் பணம், வாட்ச் பறித்த வழிப்பறி கொள்ளையர் இருவரை போலீசார் கைது செய்தனர். நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சிவசுப்பு (24). கீழஓமநல்லூரை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் பரமகுரு (19), கட்டிட தொழிலாளி. நண்பர்களான இருவரும், சம்பவத்தன்று நாங்குநேரி பஸ் நிலையம் அருகே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இருவர், அரிவாளை காட்டி மிரட்டி பரமகுருவிடம் இருந்து ரூ.2 ஆயிரம், அவர் அணிந்திருந்த ரூ.4,500 மதிப்பிலான வாட்ச் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்ப முயன்றனர்.தகவலறிந்து விரைந்து வந்த நாங்குநேரி போலீசார், வழிப்பறி கொள்ளையர் இருவரையும் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள், சுரண்டையை சேர்ந்த சுரேஷ் மகன் விஜயகுமார் (23) மற்றும் குமரி மாவட்டம் நெய்யூரைச் சேர்ந்த ராஜகோபால மகன் அருண்சஜீவ் (26) என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவர் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நாங்குநேரியில் கடந்தாண்டு டாஸ்மாக் கடையில் நடந்த திருட்டு சம்பவத்தில் இருவருக்கும் தொடர்பிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் செல்வின் ஐசக் ஞானதாஸ் வழக்குப் பதிந்து விஜயகுமார், அருண்சஜீவ் ஆகியோரை கைது செய்தார்.


Tags : robbers ,architect ,
× RELATED பட்டாக்கத்தியுடன் திரிந்த 2 ரவுடிகள் கைது