×

சொத்து தகராறில் தந்தை, மனைவிக்கு அரிவாள் வெட்டு வாலிபர் கைது

தென்தாமரைக்குளம். செப்.17 :  சாமிதோப்பு அருகே செட்டிவிளையை ேசர்ந்தவர் ராமலிங்கம் (70). இவருக்கு ராஜசேகரன் (38), ராஜேஷ் (36) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் ராமலிங்கம் தன்னுடைய சொத்துக்களை இரு மகன்களுக்கும் பிரித்து கொடுத்துள்ளார். இதில் இளைய மகன் ராஜேஷ் தனக்கு குறைவான சொத்து கொடுத்ததாக கூறி தந்தை ராமலிங்கத்திடம் தகராறு செய்துள்ளார். தகராறு பின்னர் கைகலப்பாக மாறி உள்ளது.

இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து தந்தை என்றும் பாராமல் ராமலிங்கத்தை வெட்டியுள்ளார்.இதில் அவரது உடலின் பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்த ராஜேஷின் மனைவி அனந்தநாயகி (32) தன்னுடைய கணவர் ராஜேஷிடம் இருந்து அரிவாளை பறிக்க முயற்சி செய்து உள்ளார். இதில் அனந்த நாயகிக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. காயமடைந்த ராமலிங்கம் மற்றும் அனந்த நாயகியை உறவினர்கள் மீட்டு  ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின்பேரில் தென்தாமரைக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷை கைது செய்தனர்.

Tags :
× RELATED குழித்துறை மறைமாவட்ட பொது நிலையினர் அமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு