×

பி.எஸ்.என்.எல் தொழிற்சங்க அங்கீகார தேர்தல் வாக்குப்பதிவு நாகர்கோவில், குழித்துறையில் நடந்தது

நாகர்கோவில், செப்.17 : நாகர்கோவில் மற்றும் குழித்துறையில் பி.எஸ்.என்.எல் தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.
நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அங்கீகார தேர்தல் நடத்தப்படுகிறது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் குழித்துறையில் இந்த தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. குழித்துறையில் 100 பேரும், நாகர்கோவிலில் 150 பேரும் என்று மொத்தம் 250 பேர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு தேர்தல் நடந்தது.

அகில இந்திய பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கம், தேசிய டெலிகாம் ஊழியர் கூட்டமைப்பு ஆகிய இரு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் உட்பட 18 சங்கங்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. நேற்று காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடந்தது. வாக்குகள் நாளை (18ம் தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருப்பதாக ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Tags : BSNL ,trade union recognition polling ,Pittsburgh ,Nagercoil ,
× RELATED பந்தலூரில் பிஎஸ்என்எல் சேவை குறைபாடு