×

மேஸ்திரி வீட்டில் 25 சவரன், பணம் திருட்டு டிஎஸ்பி விசாரணை பெரணமல்லூர் அருகே துணிகரம்

பெரணமல்லூர், செப்.15: பெரணமல்லூர் அருகே மேஸ்திரி வீட்டில் 25 சவரன் நகைகள் மற்றும் ₹20 ஆயிரம் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். பெரணமல்லூர் அடுத்த நாராயணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(44), மேஸ்திரி. இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டிக்கொண்டு, தனது மனைவியுடன் விவசாய நிலத்திற்கு சென்றார். சிறிது நேரத்தில் இருவரும் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்த 25 சவரன் நகை, ₹20 ஆயிரம் திருட்டு போனது தெரிந்தது. இதுகுறித்து சிவக்குமார் பெரணமல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், செய்யாறு டிஎஸ்பி சுந்தரம், இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களை வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : investigation ,DSP ,house ,Peranamallur ,Maestri ,
× RELATED செய்யாறு அருகே இன்று நடக்கும் திருமண...