×

அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை முத்துப்பேட்டை போலீசார் குடியிருப்பு வளாகத்தில் மரக்கன்றுகள் நடும்விழா

முத்துப்பேட்டை, செப்.15: முத்துப்பேட்டை டிஎஸ்பி அலுவலகம் மற்றும் போலீசார்குடியிருப்புகள் உள்ள வளாகத்தில் இருந்த மரங்கள் கடந்தாண்டு கஜா புயலின்போது அடியோடு சாய்ந்து அழிந்துபோனது. இதனையடுத்து மீண்டும் இந்த வளாகத்தில் மரங்களை வளர்க்கும் முயற்சியில் டிஎஸ்பி இனிகோ திவ்யன் மேற்க்கொண்டுள்ளார். அதற்காக கடந்த சில தினங்களாக அப்பகுதி தூய்மை படுத்தப்பட்டு சரி செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. இதில் டிஎஸ்பி இனிகோ திவ்யன் மரக்கன்றை நட்டு துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து போலீசார் களத்தில் நின்று 50க்கும் மேற்பட்ட பல்வேறு வகை பயன் தரும் மரக்கன்றுகளை நட்டனர். இதில் சங்கேந்தி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்மேட்டுக்கொட்டகம் சண்முகம் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags : Government Employees Union ,premises ,
× RELATED ஓய்வு அரசு ஊழியர் சங்க கூட்டம்