×

பாபநாசம் பகுதியில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி

பாபநாசம், செப். 15: பாபநாசத்தில் நேற்று முன் தினம் காலை வெயில் கடுமை காட்டி வந்தது. இந் நிலையில் நேற்று முன் தினம் இரவு எட்டு மணி அளவில் வானில் கரு மேகங்கள் திரண்டு தூறலாக பெய்யத் தொடங்கிய மழை பின்னர் வலுத்து பலத்த மழையாக மாறி சுமார் ஒரு மணி நேரம் வெளுத்து வாங்கியது. இந்த மழையால் கும்பகோணம்- தஞ்சாவூர் மெயின் சாலையில் மழை நீர் ஆறு போல் ஓடியது. சாலையில் ஓடிய மழை நீரால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிக்கு ஆளாயினர். கடந்த 3 தினங்களாக பாபநாசத்தில் பெய்து வரும் மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயருமென்றும், இந்த மழை விவசாயத்திற்கு பயன்படுமென்றும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Tags : Rain farmers ,area ,Papanasam ,
× RELATED பாபநாசம் தாலுகா பகுதிகளில் குறுவை...