×

போலீஸ் குவிப்பால் பரபரப்பு பொன்னமராவதி அருகே வலையபட்டி-தூத்தூர் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் காவிரிநீர்

பொன்னமராவதி, செப்.15: பொன்னமராவதி அருகே வலையபட்டி - தூத்தூர் சாலையில் வீணாகும் காவிரி குடிநீரை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வலையபட்டி-தூத்தூர் சாலையில் ராமநாதபுரம் கவிரி கூட்டுகுடிநீர் திட்ட பெரிய பைப் மூலம் குடிதண்ணீர் செல்கிறது. இதில் தூத்தூர் அவுட்டர் தீத்தான்பட்டி என்ற இடத்தின் தெற்குப்புறம் சாலை ஓரம் காவிரி குடிநீர் குழாயில் பொருத்தப்பட்டுள்ள கேட்வால்வில் இருந்து வெளியேறும் காவிரிநீர் நிரம்பி வீணாக சாலையில் வழிந்தோடுகிறது. தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள இந்த சூழலில் குடி தண்ணீர் வீணாவதை உடனே சரிசெய்ய வேண்டும் என பொதுமக்க்ள கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : flooding ,Walaiyapatti-Thoothur ,road ,Ponnamaravathi ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...