×

திருச்செங்கோட்டில் இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு, செப்.15: தமிழகத்தில், 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையை கண்டித்தும், பொதுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே, இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர். 

Tags : Indian ,Students Union ,Tiruchengode ,
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்