×

போக்குவரத்து விதிமீறிய 234 பேருக்கு அபராதம்

நாமக்கல், செப்.15: தமிழகத்தில் வாகன விபத்துகளைக் குறைக்கும் விதமாக, குடிபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்களின் லைசென்சை ரத்து செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டு, போக்குவரத்து விதிமுறையை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் போதையில் வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக ஓட்டுதல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, போலீஸ் உயர்  அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி, நேற்று முன்தினம் போக்குவரத்து விதிமுறையை மீறியதாக நாமக்கல் மாவட்டத்தில் 234 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED வாக்கு இயந்திரம் பழுது வாக்குப்பதிவு தாமதம்