×

ஸ்டவ் வெடித்து இளம்பெண் பலி

விருத்தாசலம், செப். 15: விருத்தாசலம் அடுத்த வலசை கிராமத்தை சேர்ந்தவர் அங்கமுத்து மகன் ஆறுமுகம் (47). இவரது மனைவி பிரியா (38). இவர்களுக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆன நிலையில் 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 1ம் தேதி அன்று மண்ணெண்ணெய் ஸ்டவ்வில் சமையல் செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக திடீரென ஸ்டவ் வெடித்து பிரியாவின் உடலில் தீ பரவியது. இதனால் அலறி துடித்த அவரை, அவரது உறவினர்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். இதுகுறித்து ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED வில்லியனூரில் முதியவரை ஏமாற்றி தாமரை...