×

மார்த்தாண்டம் அருகே விபத்து பொதுப்பணித்துறை ஊழியர் பலி

மார்த்தாண்டம், செப். 15: குலசேகரம்  அருகே செருப்பாலூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (46).  பொதுப்பணித்துறையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு  மார்த்தாண்டத்தில் இருந்து செருப்பாலூருக்கு பைக்கில் சென்றுள்ளார்.  பழைய தியேட்டர் சந்திப்பில் இருந்து குலசேகரம் சாலையில் திரும்பி  செல்லும்போது வேகத்தடையில் ஏறி இறங்கிய பைக் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் சுரேஷ்குமார் படுகாயம் அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை  மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சுரேஷ்குமார் பரிதாபமாக இறந்தார். சம்பவம்  குறித்த புகாரின்பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.

Tags : Accident ,servant ,Marthandam ,
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...