×

வீரபாண்டியில் பெண் மர்மச்சாவு

தேனி, செப். 15: தேனி அருகே வீரபாண்டியில் வயல்வெளியில் அடையாளம் தெரியாத நிலையில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தேனி அருகே வீரபாண்டியில் பைபாஸ் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான வயலில், நேற்று காலை சுமார் 50 மதிக்கத்தக்க பெண் ஒருவர் சிவப்பு சேலை, ரவிக்கை அணிந்திருந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகலறிந்து வந்த வீரபாண்டி போலீசார் இறந்து கிடந்த பெண்ணின் பிரேதத்தை கைப்பற்றி, தேனி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், பெண்ணின் மர்ம சாவு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Woman Marmachau ,Veerapandi ,
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி