×

உலக நன்மை வேண்டி ராஜகாளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

திருப்புத்தூர், செப். 15: திருப்புத்தூர் ராஜகாளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டியும், பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டியும் திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. இதனையொட்டி ராஜகாளி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு வெள்ளி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து அர்ச்சனைகளும் சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.

இதில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட திருவிளக்குப் பூஜை தொடங்கியது. இதில் பிள்ளையார்பட்டி சிவநெறிக்கழக சிவாச்சாரியர்கள் திருவிளக்குப் பூஜைக்கான 108 வேதமந்திரங்களை முழங்கினர். மஞ்சள், தாலிக்கயிறு, மங்கலத்தட்டு, உள்ளிட்ட மங்கலப் பொருள்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை செட்டியதெரு விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Rajakalyamman ,
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்