×

ப.சிதம்பரம் கைதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருப்புத்தூர், செப். 15: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதைக் கண்டித்து,  மாவட்ட காங்கிரஸ் சார்பில், திருப்புத்தூர் புதிய பஸ்நிலையம் எதிரே, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏக்கள் ராம.அருணகிரி, ராம.சுப்புராம், மாவட்டப் பொருளாளர் எஸ்.எம்.பழனியப்பன், துணைத்தலைவர் வழக்கறிஞர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் அபிமன்யு முன்னிலை வகித்தனர். நகர் தலைவர் திருஞானசம்மந்தம் வரவேற்றார். மாநில சிறப்பு பேச்சாளர்கள் கவிஞர் அப்பச்சி சபாபதி, சிங்கை தர்மன், ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில், ‘ப.சிதம்பரம் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. நாட்டு பொருளாதாரம் பின்னடைவை நோக்கிச் செல்கிறது என கோஷமிட்டனர். மகிளா காங்கிரஸ் துணைத்தலைவி வித்யா, மாவட்ட மகளிரணித் தலைவி ஏலம்மாள், வட்டாரத் தலைவர்கள், நகரத் தலைவர்கள் உள்ளிட்ட மாவட்ட அளவிலான நகர், ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பிரசாத் நன்றி கூறினார்.

Tags : Congress ,party protests ,arrest ,P. Chidambaram ,
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...