பாலக்காடு, செப்.15: பாலக்காடு மாவட்டத்தில் 21 அரசு மதுக்கடைகளில் ஓணம் பண்டிகையொட்டி ரூ.6.91 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றுள்ளது.இது கடந்தாண்டை விட கூடுதாலக தொகையாகும்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக தேங்குறிச்சி மதுபான கடையில் 68 லட்சத்து 43 ஆயிரத்து 190 ரூபாய்க்கு விற்பனையாகி முதல் இடத்தையும். பட்டாம்பி மதுபான கடையில் 51 லட்சத்து 6 ஆயிரத்து 150 ரூபாய்க்கும் விற்பனையாகி 2வது இடத்தையும் பிடித்தது என்பது குறிப்பிடதக்கது.