×

சூலூர் அருகே கோயிலில் கொள்ளை முயற்சி

சூலூர், செப். 15: சூலூர் அப்பநாய்க்கன்பட்டி பகுதியில் கரிவரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலின் பூசாரியாக அதே ஊரைச் சேர்ந்த வெங்கட்ராமன்(64) என்பவர் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு கோயிலை பூட்டி விட்டு வெங்கடராமன் வீட்டிற்கு சென்று பின் நேற்று அதிகாலை வந்து பார்த்தபோது கோயிலின் இரும்பு ஷட்டர் உடைக்கப்பட்டிருந்த்து. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கோயில் முக்கியஸ்தர்களுக்கு தகவல் அளித்தார். தொடர்ந்து சூலூர்

போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கோயிலின் உள்ளே சென்று பார்த்தனர். ஆனால் பொருட்கள் ஏதும் திருட்டு போகவில்லை என தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : robbery ,temple ,Sulur ,
× RELATED தாமரையை தோற்கடிக்கணும்… மனதில் இருப்பதை கொட்டிய டிடிவி