×

இவ்வாறு அவர் கூறினார். இரும்பாலை ஊழியர்களுக்கு ேமாகன் குமாரமங்கலம் ஆறுதல்

சேலம், செப்.11: சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்து, ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 37வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காங்கிரஸ் செயல் தலைவர் மோகன்குமாரங்கலம் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பேசியதாவது: காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரதம் இருந்தபோதே ₹100 கோடி வட்டி கட்ட வேண்டியுள்ளது. அதனால் இந்த பிளாண்ட் நஷ்டத்தில் ஓடுகிறது என்று கூறப்பட்டது. ஆனால், அம்பானி தொழிற்சாலைகள் நஷ்டத்தில் ஓடவில்லையா? அவர் பல கோடி வட்டி கட்டாமல் உள்ளார். அவருக்கு மற்றொரு வங்கியில் இருந்து கடன் வாங்கி கொடுக்கப்படுகிறது. ₹2 ஆயிரம் கோடி கடனுக்காக ₹100 வட்டி கட்டி முடியாமல் சொத்தை விற்கலாமா?. நாட்டில் தனியார் தொழிற்சாலை தேவைதான். இரும்பாலையை தொடங்க எவ்வளவு பேரிடம் நிலத்தை கையகப்படுத்தி கஷ்டப்பட்டு உருவாக்கிய ஆலையாகும். ஒரே பிரச்னையில் விற்க நினைத்தால் நியாயமா?. அது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

Tags : Commencement ,
× RELATED சபரிமலை சீசன் தொடக்கம்...