×

கூடைப்பந்து வீரர், வீராங்கனைகள் இன்று தேர்வு

சிவகங்கை, செப். 11: சிவகங்கையில் மாநில கூடைப்பந்து போட்டியில் பங்கேற்பதற்கான வீரர், வீராங்கணைகள் தேர்வு இன்று (செப்.11) நடக்க உள்ளது.மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் நடத்தும் மாநில கூடைப்பந்து சாம்பியன்ஷிப் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பிரிவு போட்டிகள் திருச்சியில் 19.09.2019 முதல் 24.09.2019 வரை நடக்க உள்ளது. இதற்கான வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு இன்று மாலை 4 மணிக்கு சிவகங்கையில் உள்ள மாவட்ட விளையாட்டரங்க கூடைப்பந்து மைதானத்தில் நடக்க உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் கூடைப்பந்து வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் 01.01.2001 அன்று அல்லது அதற்கு பின்பு பிறந்திருக்க வேண்டும். பிறப்பு சான்றிதழ் (கணினி மயக்கமயமாக்கப்பட்டது) பிறந்த தேதியில் இருந்து அதிகபட்சமாக நான்கு வருடத்திற்குள் உள்ள சான்றை தேர்வு இடத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விபரம் அறிய 99425 58401, 88704 55526என்ற செல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : heroes ,
× RELATED பிரைம் வாலிபால் லீக் தொடர் இறுதி...