×

கமுதி அரசு பணிமனை ஊழியர் மயங்கி விழுந்து சாவு

கமுதி, செப். 11: கமுதி அரசு பணிமனை, திருச்சுழி செல்லும் சாலையில் உள்ளது. கே.நெடுங்குளத்தை சேர்ந்த இருளாண்டி (45) கடந்த 8 மாதமாக தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் நேற்று அரசு பணிமனை கழிவறைக்கு அருகே உள்ள தண்ணீர் குழாய் அருகே இருளாண்டி மயங்கி கிடந்தார். இதைப் பார்த்த மற்ற ஊழியர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்யை வரவழைத்து கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருளாண்டி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவருக்கு ஏற்கனவே உடல் நலக்குறைவு இருந்துள்ளது. இதனால் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறினர்.இருளாண்டி மகன் முத்துப்பாண்டி (24) அளித்த புகாரின்பேரில் கமுதி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Kamuthi Government Workshop ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை