×

போதையில் தகராறு செய்த வாலிபர் கைது

கடத்தூர், செப்.11: கடத்தூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் ஆனந்த்(26). இவர் நேற்று முன்தினம் இரவு, தர்மபுரி சாலையில் சுரேஷ்குமார் என்பவர் வைத்துள்ள கடை முன்பு, மதுபோதையில் அவ்வழியாக வந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த கடத்தூர் போலீசார், ஆனந்தை  அங்கிருந்து செல்லுமாறு கூறினர். அப்போது போலீசாரையும் அவர் ஆபாச வார்த்தைகளால்  திட்டியதாக தெரிகிறது. இதையடுத்து, அவரை கைது செய்தனர்.

Tags : dispute ,
× RELATED கொடுங்கையூர் டாஸ்மாக் கடையில் தகராறு...