×

கிருஷ்ணகிரி நாளந்தா கல்வி குழும இல்லத்திருமண வரவேற்பு விழா

கிருஷ்ணகிரி, செப்.11: கிருஷ்ணகிரியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நாளந்தா கல்வி குழுமம் சார்பில் கிருஷ்ணகிரி, ஓசூர், மேட்டூர் ஆகிய இடங்களில் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி குழுமத்தின் தலைவர் ஆடிட்டர் கொங்கரசன்-சாமுண்டீஸ்வரி தம்பதிகளின் மகனான டாக்டர் புவியரசனுக்கும், பொள்ளாச்சி கருப்பம்பாளையத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஆர்எஸ் அதிகாரியான முத்துச்சிதம்பரம்-பூங்கொடி தம்பதியரின் மகளான டாக்டர் ஜனனிக்கும்  கோவையில் திருமணம் நடந்தது. இவர்களது திருமண வரவேற்பு விழா பர்கூர் காஞ்சனா மகாலில் நடந்தது.  இதில், தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, எம்எல்ஏக்கள் பர்கூர் ராஜேந்திரன், ஊத்தங்கரை மனோரஞ்சிதம் நாகராஜ், முன்னாள் ஆவின் தலைவர் தென்னரசு, முன்னாள் எம்பி பெருமாள், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஜெயபாலன், திமுக முன்னாள் எம்பிக்கள் சுகவனம், வெற்றிச்செல்வன், பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் எம்எல்ஏ மேகநாதன், சுப.குமார், கிருஷ்ணகிரி எம்பி டாக்டர் செல்லகுமார், மாவட்ட தலைவர் சுப்பிரமணி, முன்னாள் தலைவர் வக்கீல் காசிலிங்கம், வேலவன், தொழிலதிபர் தேவராஜ் குரூப் மதியழகன், கல்வி நிறுவனத்தினர் விஜய் வித்யாலயா மணிவண்ணன், பிரித்தீவி, வித்யாமந்திர் சந்திரசேகர், வேளாங்கண்ணி கூத்தரசன், சரஸ்வதி வித்யாலயா அன்பரசன் மற்றும் டாக்டர்கள், வக்கீல்கள், தொழிலதிபர்கள், பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். வரவேற்பு விழாவிற்கான ஏற்பாடுகளை மணமகனின் சசோதரர் கவுதமன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags : Krishnagiri Nalanda Education Group ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா