×

நீடாமங்கலத்தில் இருந்து சிவகங்கைக்கு 945டன் சன்னரக நெல் மூட்டைகள் அரவைக்கு ரயிலில் அனுப்பி வைப்பு


நீடாமங்கலம்,செப்.11: நீதிருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ,மன்னார்குடி பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்து அறுவடை செய்த நெல்களை அரசு நெரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்து.அங்கிருந்து பல்வேறு திறந்தவெளி சேமிப்பு மையங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மற்றும் அரவை செய்த அரிசிகள் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ரயில் பெட்டிகளில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு அரவைக்காகவும், அரிசிகளை பொது வினியோக திட்டத்திற்கும் அனுப்பப்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்று மன்னார்குடி, நீடாமங்கலம் பகதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்பு மையங்களிலிருந்து 75 லாரிகளில் 945 டன் சன்ன ரக நெல் மூட்டைகள் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து 21 ரயில் சரக்கு பெட்டிகளில்(வேகன்) தொழிலாளர்கள் ஏற்றி சிவகங்கை மண்டலத்திற்கு அரவைக்கு அனுப்பி வைத்தனர்.


Tags : Sivaganga ,Needamangalam ,
× RELATED 6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த...