×

12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய அறிவிப்பு வறண்டு கிடக்கும் சுள்ளன் ஆறு: தண்ணீருக்காக காத்திருக்கும் விவசாயிகள்

வலங்கைமான், செப். 11: கர்நாடாவில் பெய்த கன மழையால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளவை எட்டிய நிலையில் டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு பல ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் சில ஆயிரம் கனஅடி நீருக்காக வலங்கைமான் பகுதி சுள்ளன் ஆறு விவசாயிகள் காத்திருக்கின்னர்.வலங்கைமான் பகுதியில் வெட்டாறுக்கும் குடமுருட்டி ஆற்றிற்கும் இடையில் ஓடுகின்ற முக்கிய பாசன வடிகால் ஆன சுள்ளன் ஆற்றின் நீளம் சுமார் பதினெட்டு கிலோ மீட்டர் ஆகும். சுள்ளன் ஆறானது பொய்கை ஆறு என்ற பெயரோடு பாபநாசம் தாலுக்கா, அகரமாங்குடி அருகே புரசக்குடி என்ற பகுதியில் சிறு வடிவாய்காலாக தோன்றி வலங்கைமான் பகுதியில் சுமார் 45 மீ. அகலத்தில் வெட்டாற்றில் முடிவடைகிறது.இந்த சுள்ளன் ஆற்றிற்கு மேட்டூர் அணையிலிருந்து பிரியும் காவிரியின் கிளை நதிகளோடு நேரடியாக இதுவரை இணைப்பு எதுவும் இல்லை. டெல்டா மாவட்டங்களில் காவிரி கோட்டத்தின் கீழ் உள்ள குடமுருட்டி ஆறு, வெண்ணாறு கோட்டத்தின் கீழ் உள்ள வெட்டாறு ஆகியவற்றில் அதிகமாக நீர் வருகின்ற போது பாசனத்திற்கு போக மீதமுள்ள உபரி நீர் சுள்ளான் ஆற்றை நிரப்பும். அல்லது மழைக்காலங்களில் தேவைக்கு அதிகமான உபரி நீர் விவசாயிகளால் விளை நிலங்களில் இருந்து வெளியேற்றும் போது சுள்ளன் ஆறு நிரம்பும். டெல்டா மாவட்டத்தில் ஏனைய பகுதிகளில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட உடன் சாகுபடி மேற்கொள்ளப்படும் நிலையில் இப்பகுதி ஒரு போக சாகுபடி செய்வதற்கு உபரி நீருக்காகவும், மழை நீருக்காகவும் தஞ்சாவூர் திருவாரூர் இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த பாபநாசம், வலங்கைமான், குடவாசல் என மூன்று ஒன்றியங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுள்ளன் ஆற்று விவசாயிகள். ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளிகள் தலைமுறை தலைமுறையாக காத்திருக்கின்றனர் என்பது வேதனைக்குரிய செய்தி.

கால சுழற்சிக்கு ஏற்ப பல்வேறு வகைகளில் மாற்றம் செய்திருந்தும் விவசாயிகளின் தேவை அறிந்து பாசன ஆறுகளோடு மாற்றி சுள்ளன் ஆற்றை அமைக்காததால் அந்நியர் ஆட்சிக் காலத்தில் வடிவமைக்கப்பட்ட விதத்தில் சுள்ளன் ஆறு இன்று வரை திகழ்கிறது.
சுமார் 750 ஏக்கர் நிலப்பரப்பு பாசனம் பெறுகிறது.மழைக்காலங்களில் தேவைக்கு அதிகமாக வரும் உபரி நீரினால் பல ஆண்டு சித்தன்வாழூர், நரசிங்கமங்கலம், நல்லம்பூர் போன்ற பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த விளை நிலங்கள் சேதமடைந்து வருகின்றது. எனவே காலத்தோடு சாகுபடி செய்தால் மட்டுமே ஓரளவாவது இப்பகுதி விவசாயத்தினை காத்திட முடியும்.இந்நிலையில் இதுவரை சுள்ளன் ஆற்றில் தண்ணீர் வராததால் விவசாயப் பணிகள் துவங்காத நிலையில் எப்போது தண்ணீர் வரும். எப்போது வடகிழகு பருவமழை துவங்கும் என விவசாயிகள் உபரி நீருக்காவும், மழைக்காகவும் காத்திருக்கின்றனர். தற்போது பலஆயிரம் கனஅடி நீர் கொள்ளிடத்திலும் காவிரியிலும் திறந்து விடப்பட்டு 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம் விடப்பட்டுள்ள நிலையில் சுள்ளன் ஆறு விவசாயிகள் சில ஆயிரம் கன அடி உபரிநீருக்காக காத்திருகின்றனர்.தற்போது டெல்டா மாவட்டங்களில் ஏனைய பாசனஆறுகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்லும் நிலையில் சுள்ளன் ஆறு தண்ணீர் இன்றி இன்று வரை வறண்டு காணப்படுகிறது. ஆகையால் சுள்ளன் ஆற்றிற்கு போதிய அளவு பாசனத்திற்கு குடமுருட்டி ஆற்றிலிருந்து நீர் திறந்து விட வேண்டுமென விவசாயிகள் அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.

நதிநீர் இணைப்பு என்பது காலத்தின் கட்டாயம் ஆகிய நிலையில் முதற்கட்டமாக டெல்டா மாவட்டங்களில் உள்ள சுள்ளன் ஆற்றை பாசன ஆறுகளுடன் இணைக்க வேண்டும். சுள்ளன் ஆற்றில் அனைத்து ஆறுகளிலும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் போது நல்லூர் பகுதியில் குடமுருட்டி ஆற்றிலிந்து பிரிந்து வரும் ஆவூர் வாய்க்காலில் காருகுடி பிரிவு வாய்க்கால் அருகே ரெகுலேட்டர் அமைத்து அந்த வாய்க்கால் மூலம் சுள்ளன் ஆற்றிற்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டு அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் விதத்தில் அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.தலைமுறை தலைமுறையாக பாதிக்கப்பட்டு வரும் சுள்ளன் ஆற்றுப் பகுதியை சேர்ந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின் வரலாற்று பிரச்னையை தீர்த்து விவசாயிகளின் வாழ்வாதரத்தை காத்திட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க அரசு முன்வரவேண்டுமென அனைத்து தரப்பு விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : districts ,
× RELATED தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இரவு 7...